நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

“கணப் பொழுதினிலே”

நேவிஸ் பிலிப் கவி இல(458)

இக்கணம் எங்கேனும் இப் பூவுலகில்
ஒரு நொடிப் பொழுதினிலே
எதிர் பாரா ஏதோ ஓர் நிகழ்வு
நாளும் ஓர் அதிசயமாய்

செய்திகளும் சம்பவங்களும்
அதிர்ச்சியாய் ஆச்சரியமாய்
இன்பமாய் துன்பமாய்
ஏதாகிலுமாய்

உயிர் ஒன்று பிறக்க
உயிர்ஒன்று பிரியும்
புயலடித்தோயும்
பூகம்பம் நிகழும்

வான் வெளியினிலும்
கடல் பரப்பினிலும்
சாலை விபத்தினிலும்
நாளாந்தம் மடிவோரும்

ஏங்கித் தவிப்போரும்
அல்லலுற்றுழல்வோரும்
வையத்தில் வாடுவோரும் ஏராளமாக
ஒரு கணம் உனை வேண்டுகிறேன்
நிம்மதி தருவாயோ இறைவா!!!!!!!
நன்றி வணக்கம்…

Nada Mohan
Author: Nada Mohan