” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

“கணப் பொழுதினிலே”

நேவிஸ் பிலிப் கவி இல(458)

இக்கணம் எங்கேனும் இப் பூவுலகில்
ஒரு நொடிப் பொழுதினிலே
எதிர் பாரா ஏதோ ஓர் நிகழ்வு
நாளும் ஓர் அதிசயமாய்

செய்திகளும் சம்பவங்களும்
அதிர்ச்சியாய் ஆச்சரியமாய்
இன்பமாய் துன்பமாய்
ஏதாகிலுமாய்

உயிர் ஒன்று பிறக்க
உயிர்ஒன்று பிரியும்
புயலடித்தோயும்
பூகம்பம் நிகழும்

வான் வெளியினிலும்
கடல் பரப்பினிலும்
சாலை விபத்தினிலும்
நாளாந்தம் மடிவோரும்

ஏங்கித் தவிப்போரும்
அல்லலுற்றுழல்வோரும்
வையத்தில் வாடுவோரும் ஏராளமாக
ஒரு கணம் உனை வேண்டுகிறேன்
நிம்மதி தருவாயோ இறைவா!!!!!!!
நன்றி வணக்கம்…

Nada Mohan
Author: Nada Mohan