கனத்த கார்த்திகை

ரஜனி அன்ரன் (B.A) “ கனத்த கார்த்திகை “ 06.11.2025

கனத்தமாதம் கண்களில்நீரும் பனித்திடும் மாதம்
மனதினைத் தைத்திடும் மாதம்
மாவீரர்களை நெஞ்சினில் நினைத்திடும் மாதம்
கார்கால மழையும் பொழிந்திடும் காலம்
காற்றும் பலமாய் வீசிடும் காலம்
கடலலையும் பொங்கிடும் நேரம் !

மண்ணின் வாசமும் மனதை வருட
இது ஒளியின் திருநாள் அல்ல
ஒளியாகி நின்ற உயிர்களின் திருநாளை
உணர்த்தி நிற்கும் கனத்த மாதம்
உன்னதர்களுக்காக உணர்வோடு
தீபமேற்றிடும் திருக்கார்த்திகை மாதம் !

கனத்த கார்த்திகை திருநாள் அல்ல அதுசபதமே
ஒளியினால் எழுதப்பட்ட வலி
வலியின் இரணத்தினால் பிறந்திட்ட ஒளி
மாவீரர்களின் மெளன காவியம் !

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading