தவிக்கும் நிலை மாறிடுமோ ,ராணி சம்பந்தர்

புத்தம் புதுப் பொலிவோடு நித்தம் நாடும் சோலியோடு பிறந்த ஆங்கிலப்புத்தாண்டே நீ வருக நல்லொளி தருகவே குறுகிய பாதையில்...

Continue reading

கனத்த கார்த்திகை

ரஜனி அன்ரன் (B.A) “ கனத்த கார்த்திகை “ 06.11.2025

கனத்தமாதம் கண்களில்நீரும் பனித்திடும் மாதம்
மனதினைத் தைத்திடும் மாதம்
மாவீரர்களை நெஞ்சினில் நினைத்திடும் மாதம்
கார்கால மழையும் பொழிந்திடும் காலம்
காற்றும் பலமாய் வீசிடும் காலம்
கடலலையும் பொங்கிடும் நேரம் !

மண்ணின் வாசமும் மனதை வருட
இது ஒளியின் திருநாள் அல்ல
ஒளியாகி நின்ற உயிர்களின் திருநாளை
உணர்த்தி நிற்கும் கனத்த மாதம்
உன்னதர்களுக்காக உணர்வோடு
தீபமேற்றிடும் திருக்கார்த்திகை மாதம் !

கனத்த கார்த்திகை திருநாள் அல்ல அதுசபதமே
ஒளியினால் எழுதப்பட்ட வலி
வலியின் இரணத்தினால் பிறந்திட்ட ஒளி
மாவீரர்களின் மெளன காவியம் !

சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

Continue reading