கவிதை நேரம்-05.06.2025 கவி இலக்கம்-2014 தாயுமானவர் –

தமிழில் விடியல் முதல் ஒலி-2095 ஜெயா நடேசன் புலம்பெயர் வாழ்விலே தமிழர் வாழும் நகரத்திலே சரித்திரம் படைத்த...

Continue reading

கனத்த கார்த்திகை

ரஜனி அன்ரன் (B.A) “ கனத்த கார்த்திகை “ 06.11.2025

கனத்தமாதம் கண்களில்நீரும் பனித்திடும் மாதம்
மனதினைத் தைத்திடும் மாதம்
மாவீரர்களை நெஞ்சினில் நினைத்திடும் மாதம்
கார்கால மழையும் பொழிந்திடும் காலம்
காற்றும் பலமாய் வீசிடும் காலம்
கடலலையும் பொங்கிடும் நேரம் !

மண்ணின் வாசமும் மனதை வருட
இது ஒளியின் திருநாள் அல்ல
ஒளியாகி நின்ற உயிர்களின் திருநாளை
உணர்த்தி நிற்கும் கனத்த மாதம்
உன்னதர்களுக்காக உணர்வோடு
தீபமேற்றிடும் திருக்கார்த்திகை மாதம் !

கனத்த கார்த்திகை திருநாள் அல்ல அதுசபதமே
ஒளியினால் எழுதப்பட்ட வலி
வலியின் இரணத்தினால் பிறந்திட்ட ஒளி
மாவீரர்களின் மெளன காவியம் !

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading