கமலா ஜெயபாலன்

தென்றலின் குறும்பு
——————————
தொட்டுச் செல்லும் தொடராய் ஓடும்/
பட்டால் மேனியில் பரவசம் படரும்/
கட்டுக்குள் அடங்கா காதலினால் அவள்/
முட்டி மோதுவாள் மூர்கமாய் உலகில்/

புயலாய் பூமியிலே புரட்டிப் போடுவாள்/
இயற்கைச் சீற்றம் எண்ணவும்
முடியுமா/
கடலின் அலையுடன் கலந்து
வீசியே/
கலக்கி அடிப்பாள் கப்பலும்
தடுமாறும்/

உயிரைக் கொடுப்பாள் உயரைப் பறிப்பாள்/
உணர்வுடன் இருப்பாள்
உயிருள்ள வரையும்/
தென்றலின் குறும்பு
தெரிந்தே வாழ்கிறோம்/
நீயும் நானும்
ஒன்றாய் வாழ்வோம்/

வெப்பம் தணிக்கும்
மேனி குளிரும்/
தப்பாமல் உன்சுகம்
தரணிக்கு வேண்டும்/

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading