மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

“கல்லறைகள் திறக்கும் “

சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி இல_ 211

“கல்லறை திறக்கும் ”

கல்லறை பூக்கள்
காவிய நாயகர்கள்
காரிருளை அகற்றிய
கார்த்திகை மைந்தர்கள்!

மண்ணுக்கு
விதையாகி
முத்தாகி சொத்தாகிய
சொந்தங்கள்
கல்லறை திறக்கும்!

கல்லறைகள்
கதை சொல்லும்
காவியநாயகர் எழுவார்கள்
நெஞ்சமதில்
நினைவாக
நித்தம் நித்தம் ஏங்குகின்றோம்!

கல்லறை
திறந்து
கதை சொல்லிடும்
ஏக்கத்தில் எதிரியானவன்
விதைக்கப்பட்ட கல்லறைகள்
அழிக்கப்பட்டன!

மண்ணுக்காக மடிந்தீர்கள்
மக்களுக்காக உயிர் நீத்தீர்கள்
நீங்காத நினைவில்!

நாம் வருவோம்
நீங்கள் எழுவீர்கள் எங்கே எங்கே
ஒரு முறை உங்கள் திருமுகம் காட்டி
மறுபடி உறங்குங்கள் !

நன்றியுடன் 🙏

Author:

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading