“கல்லறைகள் திறக்கும் “

சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி இல_ 211

“கல்லறை திறக்கும் ”

கல்லறை பூக்கள்
காவிய நாயகர்கள்
காரிருளை அகற்றிய
கார்த்திகை மைந்தர்கள்!

மண்ணுக்கு
விதையாகி
முத்தாகி சொத்தாகிய
சொந்தங்கள்
கல்லறை திறக்கும்!

கல்லறைகள்
கதை சொல்லும்
காவியநாயகர் எழுவார்கள்
நெஞ்சமதில்
நினைவாக
நித்தம் நித்தம் ஏங்குகின்றோம்!

கல்லறை
திறந்து
கதை சொல்லிடும்
ஏக்கத்தில் எதிரியானவன்
விதைக்கப்பட்ட கல்லறைகள்
அழிக்கப்பட்டன!

மண்ணுக்காக மடிந்தீர்கள்
மக்களுக்காக உயிர் நீத்தீர்கள்
நீங்காத நினைவில்!

நாம் வருவோம்
நீங்கள் எழுவீர்கள் எங்கே எங்கே
ஒரு முறை உங்கள் திருமுகம் காட்டி
மறுபடி உறங்குங்கள் !

நன்றியுடன் 🙏

Author:

சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

Continue reading