” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

“கல்லறைகள் திறக்கும் “

சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி இல_ 211

“கல்லறை திறக்கும் ”

கல்லறை பூக்கள்
காவிய நாயகர்கள்
காரிருளை அகற்றிய
கார்த்திகை மைந்தர்கள்!

மண்ணுக்கு
விதையாகி
முத்தாகி சொத்தாகிய
சொந்தங்கள்
கல்லறை திறக்கும்!

கல்லறைகள்
கதை சொல்லும்
காவியநாயகர் எழுவார்கள்
நெஞ்சமதில்
நினைவாக
நித்தம் நித்தம் ஏங்குகின்றோம்!

கல்லறை
திறந்து
கதை சொல்லிடும்
ஏக்கத்தில் எதிரியானவன்
விதைக்கப்பட்ட கல்லறைகள்
அழிக்கப்பட்டன!

மண்ணுக்காக மடிந்தீர்கள்
மக்களுக்காக உயிர் நீத்தீர்கள்
நீங்காத நினைவில்!

நாம் வருவோம்
நீங்கள் எழுவீர்கள் எங்கே எங்கே
ஒரு முறை உங்கள் திருமுகம் காட்டி
மறுபடி உறங்குங்கள் !

நன்றியுடன் 🙏

Author: