கவிதை நேரம்-11.04.2024 கவி இலக்கம்-1854 பூக்களின் பூ வசந்தம் ——————–

கவிதை நேரம்-11.04.2024
கவி இலக்கம்-1854
பூக்களின் பூ வசந்தம்
——————–
நாம் வாழும் இவ் பூமிதனில்
நாம் காணும் மரம் செடி கொடிகள்
அழகு செய்ய பகலவன் அழகழகாக
மன ரம்மியாக படைத்தளித்தவன்
உதயத்தில் கிழக்கை நோக்க
மெல்ல சிவக்கிறது கிழக்கு வானம்
தொடுவானம் கிழித்து வரவே
சீறிப் பாய்கின்ற ஒளிச் சுடர்கள்
முழு இரவும் பனி குளித்த மரங்கள்
உயிர்க்க துடிக்கும் துளிர்கள்
துளிர்க்கும் தளிர்கள் கிளம்ப
பிரசவ வேதனையுறும் மொட்டுக்கள்
உச்சிக் கொப்பில் மொட்டு பூக்களாய்
மலர்ந்து சிரிக்கின்ற வர்ண ரோஜா பூக்கள்
வர்ணம் தீட்டி அழகு செய்தது போல்
கனி தரும் மரங்கள் பூக்கள் வசந்தமாய்
இப்படி எத்தனையோ கோடான கோடி பூக்கள்
பார்த்து பார்த்து அழகை ரசித்து நின்றேன்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading