கார்த்திகை இருபத்தியேழு…

வசந்தா ஜெகதீசன்
கார்த்திகை இருபத்தியேழு…
கணதியின் ரணமாய்
கங்கையில் விழியாய்
கோரமே நினைவாய்
கொன்றழிப்புகள் நிதமாய்
வலிகளைச் சுமந்திட்ட வரலாற்று இனமே

கார்த்திகை இருபத்தியேழு காரிருள் ஒளியில்
மெளனத்தின் மொழியில்
மறவர்கள் குரல்கள்
எரிமலைக் குமுறலாய்
எங்களின் இதயம்
ரணமென வெடிக்குமே
எண்ணற்ற தாய்மார் கதறலின் ஓலியில்
காந்தள் மலரே குருதியில் உறையும்
கல்லறை எங்கும் கதறும் ஓலம்
அன்றைய அவலத்தின் அகோர தேசம்
கண்முன் கங்கையாய் பெருகும் காணிக்கை விழியே
மறவர்கள் வீரத்தின் மங்காப் பெருமை!
நன்றி

Author:

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading