நினைவுகள் கனக்கின்றன 78

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 27-11-2025 ஊமையாய் உறங்கிய உள்ளத்து அலையெல்லாம் கார்த்திகை பிறந்தாலே கனக்கின்றது நினைவாலே இறுதி மூச்சின் சத்தம்...

Continue reading

கார்த்திகை இருபத்தியேழு…

வசந்தா ஜெகதீசன்
கார்த்திகை இருபத்தியேழு…
கணதியின் ரணமாய்
கங்கையில் விழியாய்
கோரமே நினைவாய்
கொன்றழிப்புகள் நிதமாய்
வலிகளைச் சுமந்திட்ட வரலாற்று இனமே

கார்த்திகை இருபத்தியேழு காரிருள் ஒளியில்
மெளனத்தின் மொழியில்
மறவர்கள் குரல்கள்
எரிமலைக் குமுறலாய்
எங்களின் இதயம்
ரணமென வெடிக்குமே
எண்ணற்ற தாய்மார் கதறலின் ஓலியில்
காந்தள் மலரே குருதியில் உறையும்
கல்லறை எங்கும் கதறும் ஓலம்
அன்றைய அவலத்தின் அகோர தேசம்
கண்முன் கங்கையாய் பெருகும் காணிக்கை விழியே
மறவர்கள் வீரத்தின் மங்காப் பெருமை!
நன்றி

Author:

வசந்தா ஜெகதீசன் கார்த்திகை இருபத்தியேழு... கணதியின் ரணமாய் கங்கையில் விழியாய் கோரமே நினைவாய் கொன்றழிப்புகள் நிதமாய் வலிகளைச் சுமந்திட்ட வரலாற்று இனமே கார்த்திகை...

Continue reading