காலத்தை உணர்ந்திடு

சிவருபன் சர்வேஸ்வரி

காலத்தை உணர்ந்திடு

கருத்தோடு மொழியைப் பகிர்ந்திடும் வேளையில்//
நல்லவளத்தோடு வாழ்வின் நயங்களும் புரியும் //
நல்நிலையோடு மனிதன் வளமேகிடல் என்றும் //
வரமுறையாய்க் கொண்டு வருவதும் சான்று //

தரமோடு செயலும் சிறக்கவில்லை என்றால் //
சீரழிவோடு பயணம் நடைப்பிணம் ஆகும் //

நற்குணத்தோடு இணங்கிடும் நன்னெறியும் கண்டே //
தற்பெருமை கொள்ளாத அகமும் பேணுதல்முறையே //

கற்பகதருவின் கருணையினாலே எத்தனை சேவைகள் //
அத்தனையும் புரிந்திடும் போதினிலே கேளாய் //
அருள்கொடையும் உன்னுடன் சேருமே பண்பாகவே //

தர்மமே தன்மானமே தளராத நோக்கமே //
கர்வமே கொள்ளாதே காலத்தை உணர்ந்திடு //

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading