10
Jan
10
Jan
தை தைமாசம்
-
By
- 0 comments
தை தைமாசம்
தைபிறக்குதென்று தையலும்
சந்தோசப்பட்டாள்
தையும் பிறந்தது சங்கடங்கள் தீரவில்லை
சாத்திரம் கேட்க கர்மவினை...
08
Jan
“பூத்திட்ட புத்தாண்டிலே”
-
By
- 0 comments
நேவி்ஸ் பிலிப்கவிஇல(447)
அன்பு நிறை நற் சமுகம் தான் வளர
வன்முறைகள் அற்றதொரு சமுதாயம்
நாம் படைக்க
இன்பத்தமிழாலே...
கீத்தா பரமானந்தன்
பெற்றோர்! சந்தம் சிந்தும் சந்திப்பு!
கருவாக்கி உருவாக்கி
உயர்வாக்கி வைக்க
வரமாகப் பெற்ற
வாஞ்சையாம் உறவு!
மருவாகப் பிறந்தாலும்
மகவாகக் காத்தே
திருவாகப் போற்றிடும்
தெய்வங்கள் பெற்றோர்!
அல்லவை நீக்கி
வல்லவர் ஆக
அல்லும் பகலுமாய்
அனுதினம் கரைப்பது
அவர்தம் உதிரம்!
சொல்லுக்குள் அடங்காச்
சுந்தரம் இவராய்
சொரிந்துமே நிற்பது
நிரந்தர நேசம்!
முகமது சான்றாய்
முகவரி ஆவார்
முழுமதி ஆக்கிட
முழுவாயுள் தருவார்
தகைமகள் கண்டே
தாங்குவார் மகுடம்
தரணியின் இவரின்றித்
தொடருமோ ஆயுள்?
வறுமையை ஒறுத்து
வளங்களைத் தந்தோர்
பெறுமதி புரிந்தே
போற்றிடல் கடனாம்
நறுமுகை என்றே
நாட்டிடல் பேறாம்
இறுதியில் அதுவே
இசைவுறும் நமதாய்!
கீத்தா பரமானந்தன்15-05-2023
Author: Nada Mohan
11
Jan
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்
_ 217
"உறைபனி"
பூம்பனி பூத்திருக்கு
பாத்திருக்க மலருது
பார்வைக்கு அழகு
பாலரின் மனதுக்கு மகிழ்வு!
காடுகள்...
11
Jan
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வானத்தில் இருந்து வெகு விரைவாக
வடிந்து விழுந்து கொண்ட மழைநீரில்
படிந்து எங்கிருந்தோ வந்த...
07
Jan
-
By
- 0 comments
வானிலிருந்து உதிரும் வைரங்கள் இவையோ
ஞாலத்தை வெண் போர்வையால் போர்ப்பவையோ
எங்கு பார்ப்பினும் வெண்மையின் ஆட்சி
பொங்கும்...