மாற்றத்தின் ஒளியாய்..

வியாழன் கவி -2273 மாற்றத்தின் ஒளியாய்.. ஆண்டு ஒன்றின் அழகிய மலர்வில் அத்தனை உளங்களில் மாற்றத்தின் ஒளியாய் இருளெனும் துயரது இனி இல்லை...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்..

வசந்தா ஜெகதீசன் ஊற்றெடுக்கும் அறிவிற்குள் உலகே வசமாகும் நாற்றெடுத்துப் பொங்கலிட்டு நன்றி சொல்தல் முறையாகும் வேற்றகத்தே வாழ்ந்திடினும்...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்

செல்வி நித்தியானந்தன் மாற்றத்தின் ஒளியாய் மாற்றத்தின் வரவாய் மாட்சிமை நிறைவாய் மங்காத ஒளியாய் மனதும் குளிர்வாய் தைமகளின் நகர்வாய் திருநாளும்விரைவாய் ஆதவன் கொடையாய் அகமும் ஆனந்தமாய் பொங்கல்...

Continue reading

கீத்தா பரமானந்தன்

சந்தம் சிந்தும் சந்திப்பு!
சாந்தி!

மனிதம் தேடும் புனிதம்
மலராய். வீசும் சுகந்தம்
கனிந்து தருவதோ இன்பம்
கைதனில் கிடைத்திடப் பஞ்சம்
தணியா மனத்தின் ஏக்கம்
தரணி வாழ்வின் உச்சம்

வாழும் காலம் தன்னை
வாஞ்சை செய்யும் பக்கம்
பாழும் மனத்தின் போக்கால்
பதியம் காணாத் தேட்டம்
நாளும் பொழுதும் அலைந்தும்
நலிவு கண்டதே மிச்சம்

தனத்தில் மேலாம் சொர்க்கம்
தக்க வைத்தால் ஏற்றம்
உனக்குள் எனக்குள் இருந்தும்
உறவாய்க் கொள்ளத் தர்க்கம்
வனப்பாம் நிறைவு ஒன்றே
வசியம் ஆக்கி வைக்கும்!

கீத்தா பரமானந்தன்21-02-2021

Nada Mohan
Author: Nada Mohan