குடும்பமெனும் சோலை

ரஜனி அன்ரன் (B.A) “குடும்பமெனும் சோலை“ 15.05.2025

குடும்பமென்பது சோலைவனம் – அங்கு
குதூகலம் வருமே தினம் தினம்
அமைதி தங்குமிடம் ஆரவாரம் பொங்குமிடம்
அன்பு விளையுமிடம் குடும்பமே
குடும்பமெனும் சோலையை வனப்பாக்க
குதூகலமாய் தந்ததே ஐ.நா.மன்றும்
குடும்பதினமாக வைகாசி பதினைந்தினை !

ஆலமர விழுதாக ஆணிவேராக
தலைமுறைகள் தழைக்கின்ற தளமாக
உறவுகளை இணைத்திடும் பாலமாக
உணர்வுகள் பொங்கிடும் மாடமாக
பிறவிப் பெருங்கடலின் தெப்பமாக
பிறப்பின் மகத்துவமாகுமே குடும்பமும் !

கட்டுக்கோப்பும் விட்டுக் கொடுப்பும்
இட்டுச் செல்லுமே நல்வாழ்விற்கு
உள்ளத்தின் அமைதி இல்லத்தில் தான்
இல்லத்தை அழகூட்டுவது குடும்பமே
குடும்பமெனும் சோலை என்றும் நந்தவனமே !

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading