நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

குடும்பமெனும் சோலை

ரஜனி அன்ரன் (B.A) “குடும்பமெனும் சோலை“ 15.05.2025

குடும்பமென்பது சோலைவனம் – அங்கு
குதூகலம் வருமே தினம் தினம்
அமைதி தங்குமிடம் ஆரவாரம் பொங்குமிடம்
அன்பு விளையுமிடம் குடும்பமே
குடும்பமெனும் சோலையை வனப்பாக்க
குதூகலமாய் தந்ததே ஐ.நா.மன்றும்
குடும்பதினமாக வைகாசி பதினைந்தினை !

ஆலமர விழுதாக ஆணிவேராக
தலைமுறைகள் தழைக்கின்ற தளமாக
உறவுகளை இணைத்திடும் பாலமாக
உணர்வுகள் பொங்கிடும் மாடமாக
பிறவிப் பெருங்கடலின் தெப்பமாக
பிறப்பின் மகத்துவமாகுமே குடும்பமும் !

கட்டுக்கோப்பும் விட்டுக் கொடுப்பும்
இட்டுச் செல்லுமே நல்வாழ்விற்கு
உள்ளத்தின் அமைதி இல்லத்தில் தான்
இல்லத்தை அழகூட்டுவது குடும்பமே
குடும்பமெனும் சோலை என்றும் நந்தவனமே !