கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
ஈரம்
———-
ஈரமில்லா நெஞ்சம்
எப்படி இரங்கும்
பாசமில்லா மனிதர்
பயணிக்கும் படகுல்
ஈரமுள்ளவர்களை ஏற்றலாமோ
ஏற்றினால் என்னதான் நடக்கும்
சிந்திக்க வேண்டிய விடயம்
சில மனிதம் இருப்பதால் தான்
இன்னும் உணர்வுகள் மதிக்கப் படுகின்றது
கடல் போல சொத்திருந்தும்
கப்பல் போல் வீடிருந்தும்
கைப்பிடியில் வசதி இருந்தும
கையறுந்த நிலையில்
அல்லவா நிற்க வேண்டி யுள்ளது
பசி பட்டினி பார்த்தும்
வெள்ளம் பெருக்கில்
மக்கள். அவலம்
பார்த்தும்
இரங்காத ஈரமற்றவர்கள்
இனி என்ன செய்வார்கள்
ஈரமுள்ள மண்ணில்
விளைந்த பொருட்கள
நல்லதாகவே இருக்கும்.
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading