“ கேளாய்உலகே”

நேவிஸ் பிலிப் (440)

புதியதோர் உலகம் செய்வோம்
பாரில் பகையை வெல்வோம்
புரிதல் மலர்கள் பூக்க
பாசமெனும் பாலூற்றி
வளர்த்தெடுப்போம்

அன்பெனும் கொடியைத் தோளேற்றி
உணர்வுகள் ஓர் வழிப் பட
நன்நெறிகள் துளிர்க்க
நேர் வழியில் நடந்திட

உறவுகள் சரிப் படும்
இறுக்கம் தளர்ந்து
நெருக்கம் நிகழும்
மனதும் மகிழும்

உறவு மெய்ப்பட
உரிமை கை கொடுத்தால்
உறவுகள் சிறக்கும்
சிறகுகள் விரியும்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading