அமைதியின் முகவடிவமே

மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் முகவடிவமே...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

பணி

எப்பணி நோக்கிலும் ஏர்ப்பணி சிறப்பே
உண்டி நிரப்பும் உழவர்பணி அன்றோ
தப்பான பணியுமே தரத்தைக் கெடுக்கும்
முப்பாட்டன் சொன்னார் முயன்றால் முடியுமென்று

அல்லும் பகலும் அயராது பணியில்
ஆண்களும் படுகின்ற அவஸ்தை அளவுண்டோ
சொல்ல முடியாத சுமைநிறைந்த வீட்டுப்பணி
பெண்களை சுழலும் பம்பரமாய் உருட்டும்

பணியுமே படுத்தும் பாடுதான் என்னே
பூமியைப் போலவே பொறுமையாய் சுற்றுவோமே…

Nada Mohan
Author: Nada Mohan