க.குமரன்

சந்தம் சிந்தும்
ஆக்கம் 164

அடைவு

காலை எழுந்ததும்
அன்றைய கேள்வி
மூன்று வேளைக்கும்
உணவு வாங்கணுமே !

கடன் கேட்டு
பல் இளிக்க
பல பேரிடம்
போய் கேட்க
மனமேனோ
சம்மதிக்கவில்லை !

என் பிரச்சனையை
நானே தீர்க்க
எளிய வழி
உள்ள மோதிரத்தை
அடைவு வைப்பதுதான் !

வட்டி குட்டி போட
குட்டி வட்டி போட
முதலை மீட்க முடியாது
மாண்டதே மோதிரம் !!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading