தவிக்கும் நிலை மாறிடுமோ ,ராணி சம்பந்தர்

புத்தம் புதுப் பொலிவோடு நித்தம் நாடும் சோலியோடு பிறந்த ஆங்கிலப்புத்தாண்டே நீ வருக நல்லொளி தருகவே குறுகிய பாதையில்...

Continue reading

சக்தி சக்திதாசன்

தீயொன்று தெரிகிறது
தீவொன்று எரிகிறது
ஏனென்று புரியாமல்
ஏதேதோ நடக்கிறது

அரசியல் நாடகத்திலே
அரிசியில்லா நிலையின்று
அவலத்தின் மத்தியிலே
அல்லாடும் சோதரர்கள்

மாறாத மேடையொன்றிலே
மாறிவிட்ட பாத்திரங்கள்
மாற்றமில்லா வாழ்வுதனை
மாற்றிவைக்க யார்வருவார்?

ஐனங்களே நாயகரென்பார்
ஐனநாயக நீரோட்டத்திலே
ஐயமின்றித் தவிக்கின்றார்
ஐனங்களின்று தாய்மண்ணில்

சதுரங்கப் பலகையிலே
சதிராடும் பகடைகளாய்
சிக்கிவிட்ட மக்கள்கூட்டம்
சிறையுடைக்கும் காலமெப்போ?

உடைந்துவிட்ட உறவுகளை
உணர்ந்து நாமொன்றாயிணைந்து
உரமிடுவோம் புதியபாதையினை
உருவாக்கி நடந்திடுவோம்

Nada Mohan
Author: Nada Mohan

    சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

    Continue reading