பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

சக்தி சக்திதாசன்

“நடப்போம் நாம் தொடர்ந்து”. அன்பு நண்பா !
வரம்புகள் கண்டோம்
விளிம்பினில் நடந்தோம்
வீம்பினில் வாழ்ந்தோம்
வீழ்ந்தும் வாழ்ந்தோம்
சேர்ந்தே சென்றோம்
சார்ந்தே இருந்தோம்
எதையும் பகிர்ந்தோம்
அதனால் சிறந்தோம்
இருளை ஒளிர்ந்தோம்
பகலில் மிளிர்ந்தோம்
கனவினில் நனைந்தோம்
நினைவினில் தவழ்ந்தோம்
பயத்தினைத் துறந்தோம்
பாசத்தை விதைத்தோம்
இளமையை ரசித்தோம்
இனிமையை வளர்த்தோம்

வறுமையை எதிர்த்தோம்
வரட்சியை வெறுத்தோம்
புரட்சியை ரசித்தோம்
புதுமைகள் புரிந்தோம்

நட்பினை போற்றினோம்
காதலை வாழ்த்தினோம்
நாட்களைக் கடந்தோம்
நாளைகளில் நுழைந்தோம்

கனவுகளின் பயணம்
களைப்பைத் தந்திடக்
கற்பனைகளின் பசுமை
நினைவுகளை நனைத்திட

இன்றுனையெண்ணி நண்பனே
இதயத்தில் ஓர் விளக்கு
இடைவிடாது ஒளிர்ந்திட
நான் நடக்கும் பயணம்
நீண்டதொரு தூரமே

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading