மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

சக்தி சிறீனிசங்கர்

வணக்கம்!
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு
பெற்றோரே!
(வெண்கலிப்பா)
தூய்மையான அன்பினிலே தாய்தந்தை விஞ்சியவர்
ஆய்வறிந்து பார்த்தாலே ஆருளரோ? அவனியிலே
பத்துமாதம் சுமந்தவளும் பக்குவமாய் வளர்த்தவளும்
சொத்துசுகம் சேர்ப்பதற்கு சோர்விலாதே உழைத்தவரும்
இன்னாரின் பிள்ளைகள்தான் இவர்களென இவ்வுலகம்
நன்றாக அறிவதற்கு நாளெல்லாம் உழைத்தவர்கள்
அன்னைதந்தை இருவருமே அயராதே உழைத்தவர்கள்
என்றுமேஎம் உள்ளத்தில் ஏற்றிடுவோம் சுடர்ஒளியாய்
மிளிர்ந்துகொண்டே இருப்பார்கள் மேதினியில் தெய்வங்கள்
ஒளிதந்த சூரியனும் ஒப்பற்ற சந்திரனும்
எம்வாழ்வாம் வானத்தை எழிலாக மாற்றியவர்
தம்வாழ்வை அர்ப்பணித்தே தன்னலமும் பாராது
தம்கடமை என்றேதான் தாய்தந்தை இருந்தாரே
அம்மாவின் ஐயாவின் அளவில்லா அன்புக்கு
எம்மாத்தி ரநன்றிதனை என்னுள்ளம் சொல்லிடுமோ
ஏங்குகிறேன் இன்னமும்தான் என்முன்னே வந்திட்டால்
தூங்கவைப்பேன் இருவரையும் தூளியிலே உறங்குகின்ற
பாலகராய்ப் பார்த்திடுவேன் பக்குவமாய்ப் பசிதீர்ப்பேன்
தாலாட்டும் பாடிடுவேன் தான்!

நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading