தவிக்கும் நிலை மாறிடுமோ ,ராணி சம்பந்தர்

புத்தம் புதுப் பொலிவோடு நித்தம் நாடும் சோலியோடு பிறந்த ஆங்கிலப்புத்தாண்டே நீ வருக நல்லொளி தருகவே குறுகிய பாதையில்...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1847

காணாமல் ஆக்கப்பட்டோர்!
இருப்பினை உறுதிசெய்யா
இழப்பினையும் முன் மொழிவு
சொல்லா
துயர நிலை தங்கி நின்று
உறவுகளை வருத்தும் நிலை
சாபமோ சரிதமோ
தொடர்கதையாம் ஈழத்தில்
இதுபோல உலகெங்கும்
உருக்குலைக்கும் கதைகள்
உணர்ந்திடவே ஒரு நாளாம்…

போரென்றும் வன்முறை
வரலாற்றுச் சதியினிலே
சகதிகளுள் புதை குழிகள்
விழுங்கியவை எத்தனையோ
மீட்பரை நம்பியே நின்ற
மனங்கள் மீட்டபோது
எஞ்சியதோ உடலெச்சங்கள்!

இளையோர் முதியோர்
பெண்ணென்று ஆணென்று
யுத்த தர்மம் காத்திடாது
யுகங்களாய்த் தொடர் துயரச்
சிக்கலுக்குள் இன்னுமே
காத்திருக்கும் உறவுகளின்
நம்பிக்கை காக்கப்படுமோ?..
சிவதர்சனி இராகவன்
9/8/2023

Nada Mohan
Author: Nada Mohan

    சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

    Continue reading