மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

-சிவரஞ்சினி கலைச்செல்வன்-

ச.ச.சந்திப்பு 222 “பெற்றோரே”
பெற்றவர்கள் முகம் நிதமும்வரும்
பற்றோடு அவர் வளர்த்த பாசம் நினைவில்வரும்
ஆண்டுத் திவசத்தை
அய்யரை அழைத்து
ஆண்டாண்டு நடாத்தினேன்
அவர்கள் தந்த சீதன வீட்டில்
ஆண்டு பல முன் போராலே
அகன்றோம் அதை விட்டு
போரின் செல் அடியில்
பேரிடியில் சிக்கிய பெருவீடு
பாழடைந்து மேடாய் ஊரில்
பார்க்க சகிக்கவில்லை
ஜயாவும் அம்மாவும்
ஆசையுடன் கட்டிய வீடு
ஒய்யார புகையிலை செடி
ஒவ்வொரு ஆண்டும் பயிர் செய்து
சேமித்த காசில் கட்டிய வீடு
ஜயாவின் படம் ஒன்றும் இல்லை
ஆனலும் முகம் மனதில் அகலாமல்
கையால் தலை கோதி
கன்னத்தில் தரும் முத்தம்
எண்ண இன்றும் கவலை
அம்மா போய் ஆண்டு பதினெட்டு
அவர் அடியில் சென்று சேர
ஆசை .
எப்போ வரும் அழைப்போ?
-சிவரஞ்சினி கலைச்செல்வன்-

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading