செம்மணி

ரஜனி அன்ரன் “ செம்மணி “ (B.A) 10.07.2025

செம்மணல் சூழ்ந்தநிலம்
செங்குருதியால் செம்மணியானதுவோ
உலகின் எட்டாவது அதிசயம்
அவலங்களின் அதிசயம் செம்மணி
கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு
வதையுண்டு சிதையுண்டு வயதுவேறுபாடின்றி
புதைக்கப்பட்டனரே உறவுகள் செம்மணியில் !

மண்ணிற்குள் மூடியகனவுகள்
மெளனக் குரல்கள் நிறைந்தகாற்று
மெளனிக்கப் பட்டதே செம்மணிக்குள்
காலங்கள்கடந்தும் காலத்தின் கட்டாயத்தில்
புதைகுழிகள் தோண்டப்பட்டு
எச்சங்கள் எண்ணிக்கையின்றி
எடுக்கப்படுகிறது ஆய்வாளர்களால் !

செம்மணி புதைகுழி மட்டுமல்ல
நூற்றாண்டு மூடியபுத்தகம்
குழந்தையின் சிரிப்பு ஒருபக்கம்
தாயின் அழுகுரல் மறுபக்கமென
மண்ணின்மார்பில் புதைந்துவிட்ட
மன்னுயிர்களின் மனசாட்சி பேசுகிறதே
மழையால் பொலிவுற்ற செம்மணி
கண்ணீரால் நனைகிறதே இப்போது !

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading