கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

செம்மணி

ரஜனி அன்ரன் “ செம்மணி “ (B.A) 10.07.2025

செம்மணல் சூழ்ந்தநிலம்
செங்குருதியால் செம்மணியானதுவோ
உலகின் எட்டாவது அதிசயம்
அவலங்களின் அதிசயம் செம்மணி
கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு
வதையுண்டு சிதையுண்டு வயதுவேறுபாடின்றி
புதைக்கப்பட்டனரே உறவுகள் செம்மணியில் !

மண்ணிற்குள் மூடியகனவுகள்
மெளனக் குரல்கள் நிறைந்தகாற்று
மெளனிக்கப் பட்டதே செம்மணிக்குள்
காலங்கள்கடந்தும் காலத்தின் கட்டாயத்தில்
புதைகுழிகள் தோண்டப்பட்டு
எச்சங்கள் எண்ணிக்கையின்றி
எடுக்கப்படுகிறது ஆய்வாளர்களால் !

செம்மணி புதைகுழி மட்டுமல்ல
நூற்றாண்டு மூடியபுத்தகம்
குழந்தையின் சிரிப்பு ஒருபக்கம்
தாயின் அழுகுரல் மறுபக்கமென
மண்ணின்மார்பில் புதைந்துவிட்ட
மன்னுயிர்களின் மனசாட்சி பேசுகிறதே
மழையால் பொலிவுற்ற செம்மணி
கண்ணீரால் நனைகிறதே இப்போது !

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading