” தமிழின் ஞாயிறு “

ரஜனி அன்ரன் (B.A) ” தமிழின் ஞாயிறு ” 18.12.2025

நல்லூர்தந்த ஞானச்சுடர் தமிழின் ஞாயிறு
தமிழ் வளர்த்த சான்றோன்
வல்லதமிழை வளமான சைவத்தை
புராணஆகமத்தை புத்துயிராக்கிய சான்றோன்
மார்கழித் திங்கள் பதினெட்டில்
மாண்புடனே உதித்தாரே மகான் நாவலர் !

ஏட்டுச்சுவடிகளை எல்லாம் தூசுதட்டி
பாட்டாக அச்சேற்றிப் பயன்தந்த பாவலன்
சைவமும் தமிழும் தளைக்கச்செய்து
நாட்டுமக்களின் நல்வாழ்விற்கும்
நன்னெறிக்கும் வித்திட்ட பெருமகன்
பாமரரும் விளங்கும் எளியநடையில்
பாருக்கு புதுநெறி படைத்த பாவலன் !

மொழியின் வளர்ச்சிக்கும் சமய எழுச்சிக்கும்
விழியாகிநின்று ஒளிகொடுத்த வித்தகனை
அழிந்து போகவிருந்த ஓலைச்சுவடிகளை அச்சுருவாக்கி
அரும்பெரும் நூல்களையெல்லாம் ஆக்கியஆசானை
அனுதினமும் போற்றிடுவோம் !

Author:

வசந்தா ஜெகதீசன் இன்று பாரதி இருந்திருந்தால்... புதுக்கவியாளன் பாரதியே படைத்தெழு படைப்பே பாரெங்கும் முனைப்பென எழுச்சியை எழுத்தாக்கும்...

Continue reading