” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

” தமிழின் ஞாயிறு “

ரஜனி அன்ரன் (B.A) ” தமிழின் ஞாயிறு ” 18.12.2025

நல்லூர்தந்த ஞானச்சுடர் தமிழின் ஞாயிறு
தமிழ் வளர்த்த சான்றோன்
வல்லதமிழை வளமான சைவத்தை
புராணஆகமத்தை புத்துயிராக்கிய சான்றோன்
மார்கழித் திங்கள் பதினெட்டில்
மாண்புடனே உதித்தாரே மகான் நாவலர் !

ஏட்டுச்சுவடிகளை எல்லாம் தூசுதட்டி
பாட்டாக அச்சேற்றிப் பயன்தந்த பாவலன்
சைவமும் தமிழும் தளைக்கச்செய்து
நாட்டுமக்களின் நல்வாழ்விற்கும்
நன்னெறிக்கும் வித்திட்ட பெருமகன்
பாமரரும் விளங்கும் எளியநடையில்
பாருக்கு புதுநெறி படைத்த பாவலன் !

மொழியின் வளர்ச்சிக்கும் சமய எழுச்சிக்கும்
விழியாகிநின்று ஒளிகொடுத்த வித்தகனை
அழிந்து போகவிருந்த ஓலைச்சுவடிகளை அச்சுருவாக்கி
அரும்பெரும் நூல்களையெல்லாம் ஆக்கியஆசானை
அனுதினமும் போற்றிடுவோம் !

Author:

ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

Continue reading