மாதரின் மறுக்கம்

இரா.விஜயகௌரி சிந்தனைத் தெளிவுடன் சீர்பெறும் வாழ்வினை உளத்தினில் உரசி நின்றால் போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும் கணத்தினில் நொடிந்து...

Continue reading

“தாயுமானவர்”

நேவிஸ் பிலிப் கவி இல (450)
உடன் வாழ்ந்த தெய்வம்
உலகிற்கே எனை வார்த்த
தியாக தீபம்
கடன் தீர்க்க முடியா அன்பு
அளவிலா பாசப் பரிமாற்றம்

தன்னலங்கள் துளியேதும்
நான் கண்டதில்லை
வருந்தாது வசந்தங்கள்
நான் காணவென்று

நான் நடக்க தான் நடந்த
முட்பாதை அகற்றி
வளமாய் என்னை வாழ வைத்த
கரை காணாத் தாய்மை

என் வாழ்வில் பசுமை தங்க
நாளும் சுமை தாங்கியாய்
சுழன்றோடும் சக்கரமாய்
ஓடி உழன்ற என் தந்தை

என் பருவ காலத்திலே
தந்தையும் தாயுமாகி
கண்ணியமாய் வளர்த்தெடுத்து
பக்குவமாய் கரை சேர்த்த
தாயுமானவர் எந்தை
நினைக்கின்றேன் நன்றியுடன்

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading