அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

“தாயுமானவர்”

நேவிஸ் பிலிப் கவி இல (450)
உடன் வாழ்ந்த தெய்வம்
உலகிற்கே எனை வார்த்த
தியாக தீபம்
கடன் தீர்க்க முடியா அன்பு
அளவிலா பாசப் பரிமாற்றம்

தன்னலங்கள் துளியேதும்
நான் கண்டதில்லை
வருந்தாது வசந்தங்கள்
நான் காணவென்று

நான் நடக்க தான் நடந்த
முட்பாதை அகற்றி
வளமாய் என்னை வாழ வைத்த
கரை காணாத் தாய்மை

என் வாழ்வில் பசுமை தங்க
நாளும் சுமை தாங்கியாய்
சுழன்றோடும் சக்கரமாய்
ஓடி உழன்ற என் தந்தை

என் பருவ காலத்திலே
தந்தையும் தாயுமாகி
கண்ணியமாய் வளர்த்தெடுத்து
பக்குவமாய் கரை சேர்த்த
தாயுமானவர் எந்தை
நினைக்கின்றேன் நன்றியுடன்

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading