கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

“தாயுமானவர்”

நேவிஸ் பிலிப் கவி இல (450)
உடன் வாழ்ந்த தெய்வம்
உலகிற்கே எனை வார்த்த
தியாக தீபம்
கடன் தீர்க்க முடியா அன்பு
அளவிலா பாசப் பரிமாற்றம்

தன்னலங்கள் துளியேதும்
நான் கண்டதில்லை
வருந்தாது வசந்தங்கள்
நான் காணவென்று

நான் நடக்க தான் நடந்த
முட்பாதை அகற்றி
வளமாய் என்னை வாழ வைத்த
கரை காணாத் தாய்மை

என் வாழ்வில் பசுமை தங்க
நாளும் சுமை தாங்கியாய்
சுழன்றோடும் சக்கரமாய்
ஓடி உழன்ற என் தந்தை

என் பருவ காலத்திலே
தந்தையும் தாயுமாகி
கண்ணியமாய் வளர்த்தெடுத்து
பக்குவமாய் கரை சேர்த்த
தாயுமானவர் எந்தை
நினைக்கின்றேன் நன்றியுடன்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading