தாயுமானவர்

ரஜனி அன்ரன் “ தாயுமானவர் “ ( B.A ) 05.06.2025

தமிழுக்கு மெய்ப்பொருள் தனை உணர்த்திய
தாயுமானவரை அறிந்தேன் இலக்கியத்தில்
நான் ஒன்றுமறியேன் பராபரமேயென்று
நாசூக்காய் பாடிவைத்தார் பண்ணோடு
தாயுமானவராய் வாழ்கின்றார் தந்தையர்
தன்னலம் கருதாத தாய்மையோடு
தாயுமானவராய் வாழும் தந்தையரைப் போற்றிடுவோம் !

அறியாத அகவையில் புரியாத பருவமதில்
அன்பான தந்தையை இழந்தசோகம்
அன்னையே தந்தையும் தாயுமாகி – எமை
அரவணைத்து வளர்த்த பாசம்
ஆளாக்கிய நேசம் வாழ்வினை அர்ப்பணித்த தியாகம்
அத்தனையும் பெரும்தியாகம் !

உலகவரலாற்றில் பதியப்படாத காவியம்
உன்னத உயிரோவியம் தந்தை
தந்தையென்ற சொல்லுக்குள் மந்திரங்கள் ஆயிரம்
தாயுமானவராய் குடும்பத்தைக் காத்திடும் இயந்திரம் !

ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

Continue reading

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading