தாயுமானவர்

ரஜனி அன்ரன் “ தாயுமானவர் “ ( B.A ) 05.06.2025

தமிழுக்கு மெய்ப்பொருள் தனை உணர்த்திய
தாயுமானவரை அறிந்தேன் இலக்கியத்தில்
நான் ஒன்றுமறியேன் பராபரமேயென்று
நாசூக்காய் பாடிவைத்தார் பண்ணோடு
தாயுமானவராய் வாழ்கின்றார் தந்தையர்
தன்னலம் கருதாத தாய்மையோடு
தாயுமானவராய் வாழும் தந்தையரைப் போற்றிடுவோம் !

அறியாத அகவையில் புரியாத பருவமதில்
அன்பான தந்தையை இழந்தசோகம்
அன்னையே தந்தையும் தாயுமாகி – எமை
அரவணைத்து வளர்த்த பாசம்
ஆளாக்கிய நேசம் வாழ்வினை அர்ப்பணித்த தியாகம்
அத்தனையும் பெரும்தியாகம் !

உலகவரலாற்றில் பதியப்படாத காவியம்
உன்னத உயிரோவியம் தந்தை
தந்தையென்ற சொல்லுக்குள் மந்திரங்கள் ஆயிரம்
தாயுமானவராய் குடும்பத்தைக் காத்திடும் இயந்திரம் !

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading