தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

“தாயுமானவர்..”

சிவதர்சனி இரா
வியாழன் கவிதை நேரம்..!!
கவி-2161

“தாயுமானவர்”..
தாயுக்கும் தாயாகி
சேயுக்கும் தாயாகித்
தரணியிலே முதலானவர்
தந்தை எனும் அற்புதமே..

கருவாகி உருவாகக்
காரணி இவரே தான்
கடமை கண்ணியம்
கற்றதும் இவரிடத்தேதான்..

வலுவான கரமிரண்டு
அரவணைப்போடு அள்ளியது
உரமூட்டி வளர்த்தது
உணர்விலே உறைத்தது..

பாசத்தைப் பாடமாக்கி
பக்குவத்தைப் பூடகமாக்கி
கூட்டுக்குள் குருவிகளை
காத்த ஆண்தெய்வமன்றோ..

தோளிலே ஏற்றி வைத்து
தோழமையாய் அணைத்திடும்
ஏழ்மையற்ற மாமனிதம்
தாயுமான பராபரமே..
சிவதர்சனி இராகவன்
5/6/2025

Nada Mohan
Author: Nada Mohan