இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

“தாயுமானவர்..”

சிவதர்சனி இரா
வியாழன் கவிதை நேரம்..!!
கவி-2161

“தாயுமானவர்”..
தாயுக்கும் தாயாகி
சேயுக்கும் தாயாகித்
தரணியிலே முதலானவர்
தந்தை எனும் அற்புதமே..

கருவாகி உருவாகக்
காரணி இவரே தான்
கடமை கண்ணியம்
கற்றதும் இவரிடத்தேதான்..

வலுவான கரமிரண்டு
அரவணைப்போடு அள்ளியது
உரமூட்டி வளர்த்தது
உணர்விலே உறைத்தது..

பாசத்தைப் பாடமாக்கி
பக்குவத்தைப் பூடகமாக்கி
கூட்டுக்குள் குருவிகளை
காத்த ஆண்தெய்வமன்றோ..

தோளிலே ஏற்றி வைத்து
தோழமையாய் அணைத்திடும்
ஏழ்மையற்ற மாமனிதம்
தாயுமான பராபரமே..
சிவதர்சனி இராகவன்
5/6/2025

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading