தியாகம்

ஜெயம்

ஒரு நிமிடம் சோர்வறியாது உலகை மறந்து
உருவாக்கும் அதிசயம் அதுதான் தாயவள் தியாகம்
தன் தியாகத்தை தியாகமென நினைக்காதவளே தாய்
தன்னையே மறந்து சேய்க்கான புனித பயணம்

தாயைப்பற்றி நூறாயிரம் கவிதை எழுதினாலும் முழுமையடையாது
தாயைப்போல தூய சொந்தமெதுவும் உறவுகளுக்குள்ளே கிடையாது
இவ்வளவு பரிசுத்தமான அன்பு ஆழமான தியாகம்
அவ்வளவு அர்ப்பணிப்புக்களுடன் சுழழ்கின்றது தாயவள் உலகம்

என் வாழ்வின் தொடக்கத்திற்கு காரணமாக திகழ்ந்தாள்
தன் விழிக்குள் எனை கனவாக்கி மகிழ்ந்தாள்
என் நிழலுக்கும் பாதுகாப்பான காவல் கோட்டை
தன்னருகில் எனையமர்த்தி பாடிவைத்தாள் வாழ்க்கைப்பாட்டை

Author:

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading