திருமணமாம்

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-65
11-03-2025

பெற்றோரின் ஆசியுடன்
பெரியோரின் அரவணைப்பில்
தலைமுறை தழைக்கவென
தலைமுறையாய் வந்ததிங்கே

இருமனம் ஒருமனதாய்
இணையும் நன்நாளாம்
திருமணமாம் இத்திருநாளில்
ஒருகணமும் பிரியாது

ஒன்றித்து வாழ்ந்து
இளம் சந்ததிக்கு
இயம்பியே செல்வோம்
இல் வாழ்வுதனை!

இயற்கையின் நியதியில்லை
இறைவனின் எண்ணமுமில்லை
குடும்பத்தின் அமைதியுமில்லை
கொடுமை கொண்டாடுவதேனோ?

ஓரினம் சேர்ந்திங்கு
எதிர்கால சந்ததி அற்று
வாழ்தலின் புரிதலகன்று
வாழ்தலே தகுமா இன்று?

Jeba Sri
Author: Jeba Sri

ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

Continue reading

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading