28
May
” கதிரும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-65
11-03-2025
பெற்றோரின் ஆசியுடன்
பெரியோரின் அரவணைப்பில்
தலைமுறை தழைக்கவென
தலைமுறையாய் வந்ததிங்கே
இருமனம் ஒருமனதாய்
இணையும் நன்நாளாம்
திருமணமாம் இத்திருநாளில்
ஒருகணமும் பிரியாது
ஒன்றித்து வாழ்ந்து
இளம் சந்ததிக்கு
இயம்பியே செல்வோம்
இல் வாழ்வுதனை!
இயற்கையின் நியதியில்லை
இறைவனின் எண்ணமுமில்லை
குடும்பத்தின் அமைதியுமில்லை
கொடுமை கொண்டாடுவதேனோ?
ஓரினம் சேர்ந்திங்கு
எதிர்கால சந்ததி அற்று
வாழ்தலின் புரிதலகன்று
வாழ்தலே தகுமா இன்று?
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.