திருமணமாம்

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-65
11-03-2025

பெற்றோரின் ஆசியுடன்
பெரியோரின் அரவணைப்பில்
தலைமுறை தழைக்கவென
தலைமுறையாய் வந்ததிங்கே

இருமனம் ஒருமனதாய்
இணையும் நன்நாளாம்
திருமணமாம் இத்திருநாளில்
ஒருகணமும் பிரியாது

ஒன்றித்து வாழ்ந்து
இளம் சந்ததிக்கு
இயம்பியே செல்வோம்
இல் வாழ்வுதனை!

இயற்கையின் நியதியில்லை
இறைவனின் எண்ணமுமில்லை
குடும்பத்தின் அமைதியுமில்லை
கொடுமை கொண்டாடுவதேனோ?

ஓரினம் சேர்ந்திங்கு
எதிர்கால சந்ததி அற்று
வாழ்தலின் புரிதலகன்று
வாழ்தலே தகுமா இன்று?

Jeba Sri
Author: Jeba Sri

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading