ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

திருமணம்

ஜெயம் தங்கராஜா

இருமனங்கள் ஒருமனமாகும் அதிசயத்தின் நாள்
திருமணமாகி ஈருயிர் ஓருயிராகும் திருநாள்
பருகிடும் தேனிலும் சுவையான உணர்வாம்
இருவரும் அனைத்தும் மறந்திடும் கணமாம்

சிறக்கடித்து பறக்கும் இளமையின் ஆசை
உறவொன்றின் அருகாமையில் சுகங்களின் ஓசை
ஒருவர் அருமையை இன்னொருவர் புரிந்து
இருவரும் படைப்பாரே ஆனந்த விருந்து

வயது முதிர்ந்தாலும் விலகுமா சொந்தம்
துயர இருட்டிலும் வெளிச்சமாகும் பந்தம்
சந்ததி பெருக்கவே ஏற்படுத்தும் நிகழ்வு
இந்த நாளிலன்றோ கிளைபரப்பும் மகிழ்வு

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading