திருமணம்

ஜெயம் தங்கராஜா

இருமனங்கள் ஒருமனமாகும் அதிசயத்தின் நாள்
திருமணமாகி ஈருயிர் ஓருயிராகும் திருநாள்
பருகிடும் தேனிலும் சுவையான உணர்வாம்
இருவரும் அனைத்தும் மறந்திடும் கணமாம்

சிறக்கடித்து பறக்கும் இளமையின் ஆசை
உறவொன்றின் அருகாமையில் சுகங்களின் ஓசை
ஒருவர் அருமையை இன்னொருவர் புரிந்து
இருவரும் படைப்பாரே ஆனந்த விருந்து

வயது முதிர்ந்தாலும் விலகுமா சொந்தம்
துயர இருட்டிலும் வெளிச்சமாகும் பந்தம்
சந்ததி பெருக்கவே ஏற்படுத்தும் நிகழ்வு
இந்த நாளிலன்றோ கிளைபரப்பும் மகிழ்வு

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading