திருமதி சிவமணி புவனேஸ்வரன்

சந்தம் சிந்தும் சந்திப்பிற்காய்
சிவமணி புவனேஸ்வரன்.
தலைப்பு
*ஆறுமோ ஆவல்*

கூறும்பல் மொழிகளில் குன்றெனத் திகழ்வளர்
குவலயத் தமிழ்மொழியே

சாறெனப் பழச்சுவை சாற்றிட இனித்திடும்
சங்கத்தமிழ் அணங்கே

ஊறும் உணர்வினில் உள்ளத்தில் உதித்துமே
உண்மைகள் சொன்னவளே

பேறென வாய்த்துமே பெருமகிழ்வு ஊட்டியே
பேதையெனை ஈர்த்தவளே

தேறிட என்மனம் தேற்றிடும் வகையினில்
தேடிட அணைந்தவளே

மாறிடும் உலகினில் மாற்றங்கள் இன்றியே
மாண்பினில் காத்தவளே

வீறுகள் கொண்டுமே வீழ்ந்திடா வண்ணமே
விந்தைகள் புரிபவளே

ஆறுமோ ஆவலும் அறிந்திட உன்னையே
ஆற்றுவாய் அன்னையே

Nada Mohan
Author: Nada Mohan

    சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

    Continue reading