தை தைமாசம்

தை தைமாசம்
தைபிறக்குதென்று தையலும்
சந்தோசப்பட்டாள்
தையும் பிறந்தது சங்கடங்கள் தீரவில்லை
சாத்திரம் கேட்க கர்மவினை என்றார்கள்
பாத்திரமின்றி பட்டினியான கதைதான்
உழுதவயல் உக்கிரத்தால் அழிய
பெய்தமழையும் பெருவெள்ளமாய்
பாய
அழுத உழவன் ஆற்றாமை தானடைய
எழுதிய எழுத்தோ எழும்பி நின்று குதித்தது
முடிந்தது ந்த்தார் கொண்டாட்டம்
மூக்கு முட்டக் குடித்து கொண்டாடினர்
நாட்டிலே நிற்கதியானோரை
நினைக்கவேயில்லை
நலன் விரும்பி சேவைசெய்ய
ஒருசிலரே உள்ளனர்
வந்த வெள்ளம் வாரியே சென்றது
நின்ற வெள்ளம் நோயினைக் கொடுத்தது
வீடின்றி வாசலின்றி வெந்த உள்ளங்கள்
வேதனையில் துடித்து வெம்பியே
வெடித்தது
வடிகாலாய் வருகிறது தைமாசம்தான்
வாழ்விலே தந்திடுமாம் வசந்தமும் தான்
சோடிகள் இணைவதும் தைமாசந்தான்
சோடித்து மகிழ்வதும் தையில்தான்

Author:

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் _ 217 "உறைபனி" பூம்பனி பூத்திருக்கு பாத்திருக்க மலருது பார்வைக்கு அழகு பாலரின் மனதுக்கு மகிழ்வு! காடுகள்...

Continue reading