நகுலவதி தில்லைதேவன்

165. சந்தம் சிந்தும் கவி

நாதியற்ற மானிடர்கள்

காசியினில் மானிடர்கள்
நாதியற்று வாழும் நிலை
மாறிடாதோ

ஊரையெல்லாம் சூறையாடி
பையினுள் போட எண்ணி
யுத்தம் என்ற பெரு நெருப்பில்
வதைக்கும் நிலை
மாறிடாதோ?

குஞ்சு முதல் முதியவர் வரை
அஞ்சி ஓடும் நிலைமை
மாறிடாதோ?

ஓடி ஓடி உழைத்து வாழ்ந்த
மண்ணை விட்டு
உயிரை பிடித்து ஊர் ஊராய்
ஓடும் நிலை
மாறிடாதோ

எல்லை கடந்து தஞ்சம்
புகுந்தது வாழும் மாந்தர்
நிலை மாறிடாதோ

ஈனம் அற்ற அரக்கர்
மனம்மாறி யுத்தம் நிறுத்தி
மாந்தர் வாழ வழிகாட்டும்
பாதை திறந்திடாதோ?
இறைவா

அதிபருக்கும் பாவை அண்ணா இரவு வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading