வரமாகும் வாய்ப்புக்களே

கதவை தட்டாது வரும்
கவனிப்போருக்கே அள்ளித் தரும்
நம்பிக்கை விதையாய் விதைக்கும்
நம்பியோர்க்கு வாழ்க்கை தித்திக்கும்

திரும்பவும் வருமா அது எப்போது
விரும்பினால் மனம் தரிசனம் இப்போது
ஒவ்வோர் தருணமும் கொடுப்பது காலம்
தப்பாது பிடித்தால் வரமாகும் நாளும்

வாய்ப்புக்கள் வரும்போது எதற்காக தவிர்ப்பு
வாய்ப்பை விட்டபின் மனதிற்குள் தவிப்பு
வருவது வரட்டுமென பயன்படுத்தி பார்க்கலாம்
பயத்தையும் தயக்கத்தையும் துணிவாலே தீர்க்கலாம்

வந்தவற்றை வரமாக்குவது மனிதரின் உள்ளமே
தத்துவத்தை புரிந்துகொண்டால் அர்த்தமும் சொல்லுமே

ஜெயம்
26-02-2026

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading