நகுலவதி தில்லைத்தேவன்

1.3.22 சந்தம் சிந்தும் கவி
செய்வாய் 164.

செல் செல்

செல்கள் போன்கள்பலவிதம்
விதம் விதமானய்
விற்கிறார் கடைகளில்
விலைகளும் விதம் விதம்
ஆடை மாற்றுவது போல
மாற்றிடுவர் பணம்
படைத்தவர்

பார்த்து பார்த்து செல் வாங்க வரிசையில்
நிற்கிறார்

நாட்டிலை வீட்டிலை மூலையிலும் பிளேனிலும்
செல்லுடன்
சுத்திடுவார்

விடிந்தால் அதிலே
முழிக்கிறார்
இரவானால் செல்லுடன்
உறங்கிடுறார்

கை வைத்து அமுக்கிறார்
தனிய பார்த்து பார்த்து
சிரிக்கிறார்
கூப்பிட்டாலும் காதும்
கேளாது

சோறும் வேண்டாம்
உறவும் வேண்டாம்
செல் இருந்தால்
போதும்

பணம் இல்லாதவன்
பழுதானாலும் மீண்டும்
திருத்தி பயன் பெற்றிடுவார்
செல்லை பார்த்து
ஏங்கிடுவார்

குழந்தை முதல் கிழவன்
வரை
செல்லே ஆட்டிப் படைக்குது
பாரையே .
.
பாவை அண்ணா க்கும் அதிபருக்கும். நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் உயிரூட்டும் உருவங்கள் பயிரூட்ட நீர் ஊற்றியே வளர்த்திட்டது போலவே வாழ்வுப் போராட்டமதில் சாதித்திடவே பிறந்தோர் பணி செய்வதே தியாகம் பூரிப்பூட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

    Continue reading