தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

நகுலா சிவநாதன்

மலர்ந்துவா! தைமகளே!

புலர்கின்ற புத்தொளியே புனிதம் காக்க
மலர்கின்ற புத்தாண்டே மகிழ்வைத் தருக!
பிறக்கின்ற தைமகளும் புதுமை தரவே
நிறைக்கின்ற நல்மாதம் நித்திலத்தில் பொலிக!

தைமகளே வருக! வருக!
தரணியெங்கும் தமிழ் மணக்க வருக!
தாய்மண் பெருமை நிறைத்து வருக!
தண்மதியாய் ஒளிபரப்பி நிறைக!

மண்மலரே மணந்து வருக! வருக!
மாண்புகளை அள்ளி தருக! தருக!
கண்மலர்ந்து கனிகொடுக்கும் மரங்கள் நிறைக!
காசினியில் அன்பு மலர்க! ஆசை குறைக!
இன்பம் பெருக! இல்லம் செழிக்க!
மலர்ந்து வா தைமகளே!
புலர்ந்து பொலிக! பூமகளே!

நகுலா சிவநாதன் 1744

Nada Mohan
Author: Nada Mohan