தன்னம்பிக்கை 82

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-01-2026 சுற்றியிருக்கும் இருள் சூறையாட நினைத்தால் துணிவெனும் தீச்சுவாலை கொழுந்து விட்டெரியட்டும்! விழுந்தால் எழுவாய் விதிதனை வெல்வாய் விடியும்...

Continue reading

நன்றும் தீதும்

தங்கசாமி தவகுமார்

வியாழன் கவி :
“நன்றும் தீதும் ”

சிந்தனை தெளிவின் பாதையிலே
சிறப்புறு நலங்கள்
நாம் பெறவே
நன்றே செயல்கள்
நாம் செய்வோம்
கலப்பிலா அறுவடை
நாம் பெறுவோம்

நானிலம் செழிக்கும்
வான் பொலிவு
நன்றே அமைந்த
வான் வெளியை
மாசுகள் கொண்ட காற்றாக்கி
நாமே நன்றும் தீதும்
எழுதுகிறோம்

வரவும் செலவும் பார்க்கும் நாம்
வாழ்க்கையில் விதைத்தவை எதுவென்று சீர் படும்
சிந்தையை நாம் கொண்டால் தீயவை அணுகா பாதையிலே
நன்மைகள் கோடி
நாம் பெறுவோம்
நன்றென வாழ்வினை
நாம் சமைப்போம்!!!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading