நான் மானமுள்ள பொண்ணுங்க

வஜிதா முஹம்மட்
நான் மானமுள்ள பொண்ணுங்க
மல்லுக்கட்டும் பொண்ணுவென்று
என்ட மாமிவேணாண்டு சொன்னாங்க
கட்டினா என்டமதினியத்தான் கட்டுவேன்
இல்லாடி கப்பலேறி கட்டார்போவோன்
என்று என்ட இளையமச்சான் நின்டாரு
என்நெஞ்சுக்குழிக்குள்ள மச்சான
மறைச்சுவைச்சேன் தன்னால
வாலிபந்து நோயில வழுக்கிவிழுந்தேன்கண்ணால
மூடிமூடி வைச்சேன் நெஞ்சோட
மோர்ப்பம் பார்த்து பிடிச்சுப்போட்டா கையோட
மூக்குமுழி பொண்ணுவென்று மூதூரில கேட்டாங்க
பாசமுள்ள பொண்ணுவென்று பாசையூரில கேட்டாங்க
கரையூரை கடந்து சம்பூரில பசியாறின்
போய்த் தி௫மணம் செய்வோம்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading