“நினைவுகள் கனக்கிறது”

நேவிஸ் பிலிப் கவி இல(529)

ஊரறியோம் பேரறியோம்
உறங்கி விட்ட கதையறிவோம்
சீரறிவோம் திறமறிவோம் -உங்கள்
தியாகத்தின் சிறப்பறிலோம்

புன்னை மரங்களிலே
உரிமைப் பூக்கள் சிரிக்கவில்லை
அன்னை மனதினிலே அடிமை
அனல் தணியவில்லை

பூமியை நினைத்தீர்அ
அமைதியை. இழந்தீர்
கடமையில் உயர்ந்தீர்
கண்துயில் மறந்தீர்

ஆயுதம் தரித்தீர்
சுமையினை அனைவரும்
சகமாய் பிரித்தீர்
களத்தினில் போராடி
உம்முயிர் ஈந்தீர்

தியாக தீபங்களை எம்
நெஞ்சிலே தாங்கி
கார்த்திகை மலர்களை
கரத்திலே ஏந்தி
கனத்த நினைவுகளில்
வழிநீர் கசிய அஞ்சலித்தோம்
சிரம் தாழ்த்தி. நன்றி,,,,,,’!,

Author:

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading