சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

“நினைவுகள் கனக்கிறது”

நேவிஸ் பிலிப் கவி இல(529)

ஊரறியோம் பேரறியோம்
உறங்கி விட்ட கதையறிவோம்
சீரறிவோம் திறமறிவோம் -உங்கள்
தியாகத்தின் சிறப்பறிலோம்

புன்னை மரங்களிலே
உரிமைப் பூக்கள் சிரிக்கவில்லை
அன்னை மனதினிலே அடிமை
அனல் தணியவில்லை

பூமியை நினைத்தீர்அ
அமைதியை. இழந்தீர்
கடமையில் உயர்ந்தீர்
கண்துயில் மறந்தீர்

ஆயுதம் தரித்தீர்
சுமையினை அனைவரும்
சகமாய் பிரித்தீர்
களத்தினில் போராடி
உம்முயிர் ஈந்தீர்

தியாக தீபங்களை எம்
நெஞ்சிலே தாங்கி
கார்த்திகை மலர்களை
கரத்திலே ஏந்தி
கனத்த நினைவுகளில்
வழிநீர் கசிய அஞ்சலித்தோம்
சிரம் தாழ்த்தி. நன்றி,,,,,,’!,

Author: