பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

பணி”—எல்லாளன்

சந்தம் சிந்தும் சந்திப்பில்
வதந்திங்கு இணையும் உறவோரே
உந்தும் உணர்வில் கவியாக்கி
எந்தன் ரசனைக்கு உரித்தாக்கி…

வாரம் தோறும் வருவோரும் வந்திடை இடையே இணைவோரும்
நூரா ஆர்வத் தோடு வரும்
நுங்கள் பணியை மதிக்கின்றேன்

வாரம் தோறும் வருமாறு
வருத்தி கேளேன் பலநூறு
சோலி சொந்த பணி உண்டு-உம்
சுமையை உணரும் தெளிவுண்டு

ஆக்கும் கவிதை திறனாய்வால்
அடையும் தகுதி எனும் உங்கள்
நோக்குக் அமைய என் பணியை
நோகாமல் நீர் ஆய்ந்துரைப்பேன்

பாவை அண்ணா எனும் உங்கள்
பாசம் சுரக்கும் பதிவுகளால்
நேயத்தோடு என் நெஞ்சினிலே
நித்தம் வாழ்வீர் சோதரரே.

பாவை புனையும் பணியோடு
பற்பல குடும்ப பணியோடு
ஆவல் மேவ இணையும் நும்
அன்புக்கு நன்றி தொடரவோமே..

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading