பாசப்பகிர்வினிலே….

ரஜனி அன்ரன் (B.A) பாசப்பகிர்வினிலே…. 08.05.2025

பாசமென்பது வெறும் வார்த்தையல்ல
நேசஉணர்வின் ஆழத்தில் பாயும்நதி
உயிருக்குள் உயிர்தந்த உத்தமி
உணர்வோடு உறைந்திருக்கும் இசையருவி
கடவுள் தந்தவரம் கருணையுள்ளம்
வரமாகக் கிடைத்த அன்புறவு
அன்னையில்லா இல்லம் வெற்றிடமே !

பாசப் பகிர்விற்கு இலக்கணம்
அன்பின் உச்சம் அன்னை
அன்னையின் பாசத்திற்கு அளவீடுஏது
அவளின்றி பாசப்பகிர்விற்கு எல்லைதான்ஏது
அனுதினமும் வாட்டுது அவள்நினைவு
அவளின்றிய வாழ்வு என்றும் வெறுமை
இல்லாதபோது புரிகிறது அன்னையின் அருமை !

நிலவின் ஒளியாக மெளனமொழியாக
நித்தமும் வந்திடுவாள் மெல்லிசையாய்
நினைவுகளை மீட்டிடுவாள் துள்ளிசையாய்
பாசப்பகிர்வின் பேரொளி
பத்துத்திங்கள் சுமந்த சுடரொளி !

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading