கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

பாசப்பகிர்வினிலே….

ரஜனி அன்ரன் (B.A) பாசப்பகிர்வினிலே…. 08.05.2025

பாசமென்பது வெறும் வார்த்தையல்ல
நேசஉணர்வின் ஆழத்தில் பாயும்நதி
உயிருக்குள் உயிர்தந்த உத்தமி
உணர்வோடு உறைந்திருக்கும் இசையருவி
கடவுள் தந்தவரம் கருணையுள்ளம்
வரமாகக் கிடைத்த அன்புறவு
அன்னையில்லா இல்லம் வெற்றிடமே !

பாசப் பகிர்விற்கு இலக்கணம்
அன்பின் உச்சம் அன்னை
அன்னையின் பாசத்திற்கு அளவீடுஏது
அவளின்றி பாசப்பகிர்விற்கு எல்லைதான்ஏது
அனுதினமும் வாட்டுது அவள்நினைவு
அவளின்றிய வாழ்வு என்றும் வெறுமை
இல்லாதபோது புரிகிறது அன்னையின் அருமை !

நிலவின் ஒளியாக மெளனமொழியாக
நித்தமும் வந்திடுவாள் மெல்லிசையாய்
நினைவுகளை மீட்டிடுவாள் துள்ளிசையாய்
பாசப்பகிர்வின் பேரொளி
பத்துத்திங்கள் சுமந்த சுடரொளி !

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading