நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

பாசப்பகிர்வினிலே….

ரஜனி அன்ரன் (B.A) பாசப்பகிர்வினிலே…. 08.05.2025

பாசமென்பது வெறும் வார்த்தையல்ல
நேசஉணர்வின் ஆழத்தில் பாயும்நதி
உயிருக்குள் உயிர்தந்த உத்தமி
உணர்வோடு உறைந்திருக்கும் இசையருவி
கடவுள் தந்தவரம் கருணையுள்ளம்
வரமாகக் கிடைத்த அன்புறவு
அன்னையில்லா இல்லம் வெற்றிடமே !

பாசப் பகிர்விற்கு இலக்கணம்
அன்பின் உச்சம் அன்னை
அன்னையின் பாசத்திற்கு அளவீடுஏது
அவளின்றி பாசப்பகிர்விற்கு எல்லைதான்ஏது
அனுதினமும் வாட்டுது அவள்நினைவு
அவளின்றிய வாழ்வு என்றும் வெறுமை
இல்லாதபோது புரிகிறது அன்னையின் அருமை !

நிலவின் ஒளியாக மெளனமொழியாக
நித்தமும் வந்திடுவாள் மெல்லிசையாய்
நினைவுகளை மீட்டிடுவாள் துள்ளிசையாய்
பாசப்பகிர்வின் பேரொளி
பத்துத்திங்கள் சுமந்த சுடரொளி !