மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

மாதரின் மறுக்கம்

இரா.விஜயகௌரி சிந்தனைத் தெளிவுடன் சீர்பெறும் வாழ்வினை உளத்தினில் உரசி நின்றால் போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும் கணத்தினில் நொடிந்து...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன்

பாசப்பகிர்விலே!

சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி
பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய்
படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம் நீ
சுடர்போல் வளர்த்தாய் சுந்தரத்தாய் நீயம்மா!

வெற்றுக்கடதாசியல்ல நீ வெள்ளித்தங்கம்
முற்றும் துறந்து குடும்பத்தைக் காத்தாய்
பற்று வைத்துப் பாசப்பகர்விலே நிற்கதி
கற்றுக் கொண்டோம் கவலைதானம்மா!

சுட்டிப் பெண்ணாய் சுழன்ற எனக்கு
சுத்தமாய் நீ போனது பிடிக்கலை
நிற்கதியாய் நின்ற நாட்கள்……
நினைக்க நினைக்க இன்னும் அழுகைதான்!
நெஞ்சம் மறந்தாயோ எமைவிட்டுச் செல்ல!
கொஞ்சம் பாராம்மா கொழுகொம்புநீ யம்மா

வெள்ளி நிலவினிலே வேதாந்தக் கதைசொல்லி
அள்ளி அணைத்திட்ட அம்மா
புள்ளி சட்டை போட்டு விட்டு
புதிராய் எமை விட்டு மறைந்தாயோ!

நகுலா சிவநாதன்1806

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading