இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன்

பாசப்பகிர்விலே!

சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி
பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய்
படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம் நீ
சுடர்போல் வளர்த்தாய் சுந்தரத்தாய் நீயம்மா!

வெற்றுக்கடதாசியல்ல நீ வெள்ளித்தங்கம்
முற்றும் துறந்து குடும்பத்தைக் காத்தாய்
பற்று வைத்துப் பாசப்பகர்விலே நிற்கதி
கற்றுக் கொண்டோம் கவலைதானம்மா!

சுட்டிப் பெண்ணாய் சுழன்ற எனக்கு
சுத்தமாய் நீ போனது பிடிக்கலை
நிற்கதியாய் நின்ற நாட்கள்……
நினைக்க நினைக்க இன்னும் அழுகைதான்!
நெஞ்சம் மறந்தாயோ எமைவிட்டுச் செல்ல!
கொஞ்சம் பாராம்மா கொழுகொம்புநீ யம்மா

வெள்ளி நிலவினிலே வேதாந்தக் கதைசொல்லி
அள்ளி அணைத்திட்ட அம்மா
புள்ளி சட்டை போட்டு விட்டு
புதிராய் எமை விட்டு மறைந்தாயோ!

நகுலா சிவநாதன்1806

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading