மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன்

பாசப்பகிர்விலே!

சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி
பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய்
படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம் நீ
சுடர்போல் வளர்த்தாய் சுந்தரத்தாய் நீயம்மா!

வெற்றுக்கடதாசியல்ல நீ வெள்ளித்தங்கம்
முற்றும் துறந்து குடும்பத்தைக் காத்தாய்
பற்று வைத்துப் பாசப்பகர்விலே நிற்கதி
கற்றுக் கொண்டோம் கவலைதானம்மா!

சுட்டிப் பெண்ணாய் சுழன்ற எனக்கு
சுத்தமாய் நீ போனது பிடிக்கலை
நிற்கதியாய் நின்ற நாட்கள்……
நினைக்க நினைக்க இன்னும் அழுகைதான்!
நெஞ்சம் மறந்தாயோ எமைவிட்டுச் செல்ல!
கொஞ்சம் பாராம்மா கொழுகொம்புநீ யம்மா

வெள்ளி நிலவினிலே வேதாந்தக் கதைசொல்லி
அள்ளி அணைத்திட்ட அம்மா
புள்ளி சட்டை போட்டு விட்டு
புதிராய் எமை விட்டு மறைந்தாயோ!

நகுலா சிவநாதன்1806

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading